மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அதிக ஆவலோடு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், வரும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தின் ஒரு அங்கமாகும். அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தக்கவைக்க, மத்திய அரசு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை DA மற்றும் DR சலுகைகளை அறிவிக்கிறது. பணியாளர்கள் நகர்ப்புற, அரை நகர்ப்புற அல்லது கிராமப்புறத் துறைகளில் பணிபுரிகிறார்களா என்பதைப் பொறுத்து வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் அரசு அகவிலைப்படியை உயர்த்தியபோது, இந்தியா முழுவதும் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வு பெற்றவர்களும் இதன் மூலம் பயனடைந்தனர்.
தமிழகத்தில் மார்ச் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தற்போது நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படியானது 2021 ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகரிக்கப்பட்டது. 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் மாதம், மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3% அதிகரித்து DA 31% ஆக வழங்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் படி, மத்திய அரசு 3% அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. 3% உயர்வால் அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.20,000 வரை உயரும்.
அகவிலைப்படி உயர்வு (டிஏ) மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்படும். DA 3% அதிகரித்த பிறகு, அடிப்படை ஊதியமான ரூ. 18,000-க்கான DA ஆண்டுக்கு ரூ.73,440 ஆக இருக்கும். இந்த மாத இறுதிக்குள் அரசு வெளியிட இருக்கும் அறிவிப்பால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கான டிஏ உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை மார்ச் மாத சம்பளத்துடன் சேர்த்து அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.