மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அடுத்த மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் அடுத்த மாதம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஊதிய உயர்வு DA அதிகரிப்பால் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை அடுத்த மாதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது. இதன் மூலம் அவர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் DA தொகையை கணக்கிடும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI) மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர ஜூன் மாதத்தில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் அரசு ஊழியர்களின் அடுத்த அகவிலைப்படியை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை தவணைக்கான DA உயர்வு 5% முதல் 6% வரை இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் – அறிவிப்பு வெளியீடு!
இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தை (DR) 34% ஆக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்து வரும் மாதத்தில் 3% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால் ஒட்டுமொத்த டிஏ 37 சதவீதமாக உயரும். மேலும் அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியமும் கணிசமாக உயரும். இந்த அறிவிப்பின் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.