மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 6% அகவிலைப்படி (DA) உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் AICPI குறியீடு கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளதால் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு 6 சதவிகிதம் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த DA உயர்வால் சம்பளம் கணிசமாக அதிகரிக்க இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத இறுதியில், எதிர்பார்த்ததை விட அதிகமான DA உயர்வு கிடைக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், மே மாதத்திற்கான டிஏவை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியான AICPI குறியீடு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக வெளிவந்துள்ள சமீபத்திய ஊடக அறிக்கைகளை நம்பினால், ஜூலை மாதம் அகவிலைப்படியில் ஆறு சதவீதம் உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் மொத்த DA 40 சதவீதத்தை எட்டக்கூடும். இப்போது பல ஊடக அறிக்கைகள், ஜூலை 31 ஆம் தேதி அரசாங்கம் DA உயர்வை அறிவிக்கலாம் என்று கூறுகிறது. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW குறியீடு 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது. தொடர்ந்து மே மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் 129 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று(ஜூலை 8) இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு !
இந்த எண்ணிக்கை வரும் மாதத்தில் இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு 6 சதவீதத்தை எட்டும் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது. இதற்கிடையில் நாட்டில், ஆண்டு பணவீக்கம் முந்தைய மாதத்தின் 5.35 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 6.33 சதவீதமாகவும், அதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 5.14 சதவீதமாகவும் இருந்தது. இதே போல், உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 6.27 சதவீதத்திலிருந்து தற்போது 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் அகவிலைப்படியை 6% ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.