TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான IT நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று, வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மேலும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
TCS:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது.இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் பொதுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் கொரோனா தொற்றுக்கு பின்னரே அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை அறிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று, வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை கீழே பார்ப்போம்.
கோமாளிகளாக மாற்றிய “குக் வித் கோமாளி சீசன் 3” குக்குகள் – வைரலாகும் வீடியோ!
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tcs.com/careers/tcs-off-campus-hiring ‘ TCS Next Step Portal’ எனும் லிங்கை கிளிக் செய்யவும்.TCS Next Step Portal-ல் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடல்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 20 ஆகும்.கல்வி தகுதியாக, முதுகலை கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் முது அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொருளாதார படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.