Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – IVR சேவை அறிமுகம்!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள திட்டங்களில் தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்த சேமிப்பு திட்டங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே சந்தேகத்தை கேட்டறியும் வகையில் தற்போது IVR சேவையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சேமிப்புதாரர்கள் கவனத்திற்கு
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அத்துடன் இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை விட இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானியர் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது இதில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
அதன்படி அஞ்சல் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சமர்தி யோஜனா திட்டமும், ஆண் குழந்தைகளுக்கென்று பொன்மகன் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கு 5 வருட கால சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது வங்கிகளை போலவே அஞ்சல் அலுவலகத்திலும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை பெற முடியும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் போது சேமிப்புத்தாரர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தற்போது மூத்த குடிமக்கள் அதிகளவில் இருப்பதால் அவர்களுக்கு இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
Exams Daily Mobile App Download
இதனை தவிர்க்கும் வகையில் அஞ்சல் துறை அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் பயன்பெறும் வகையில் IVR சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868 என்ற நம்பரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு சேமிப்பு கணக்கு குறித்து, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப் உள்ளிட்டவற்றில் இருக்கும் சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். அதனால் இனிமேல் தேவையில்லாமல் சேமிப்புத்தாரர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.