Post Office ல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – IVR வசதி!
போஸ்ட் ஆபீஸ் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த, முக்கியமான தகவல்களை IVR கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை Post Office வெளியிட்டுள்ளது.
முக்கிய தகவல்:
இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிக நிதி நெருக்கடியை பொதுமக்கள் சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் அதிகமான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு, எஃப்டி திட்டங்களுக்கு தரும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. போஸ்ட் ஆபீஸில் தனிநபர் சேமிப்பு கணக்கு மட்டுமின்றி போஸ்ட் ஆபிஸ் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்குவது நல்ல தேர்வு தான், எனவே வரி சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை – இன்று மாலை அறிவிப்பு!
அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கை ஆன்லைனில் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் விவரங்கள் சரிபார்ப்பு செய்யப்படும். இந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த சமீபத்தில் IVR வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சில முக்கியமான தகவல்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
போஸ்ட் ஆபீசில் பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி யோஜனா, என் எஸ் சி மற்றும் பிற சிறுசேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலீட்டில் பெறப்பட்ட வட்டி, ஏடிஎம் கார்டு பிளாக் மற்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்குதல் போன்ற முக்கியமான தகவல்களை IVR கட்டணமில்லா எண்ணைப் 18002666868 பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். இந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் பதிவு செய்த தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.