இரவு ஊரடங்கு நேரத்தில் மாற்றம் – நகர நிர்வாகம் அறிவிப்பு!
சண்டிகர் நகரத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் அங்கு பகல் நேர ஊரடங்கை நீக்கியும், இரவு நேர ஊரடங்கில் மாற்றம் செய்தும் நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இரவு ஊரடங்கு:
சண்டிகர் நகரத்தில் இன்றைய நிலவரப்படி, புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் பாதிக்கவில்லை. நகரத்தில் தற்போது 198 நோயாளிகள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 235 பேருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 34 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 3 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
செப்.1 முதல் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விப்ரோ நிறுவனம்!
சண்டிகரில் கொரோனா பாதிப்புகள் நன்கு குறைந்து உள்ளதால் ஊரடங்கு உத்தரவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது. தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருக்கிறது. முதலில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருந்த ஊரடங்கு நேரத்தை தற்போது மாற்றி அறிவித்துள்ளது நிர்வாகம். அதன்படி, இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10:30 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் மட்டும் சுக்னா ஏரி திறக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இரவு ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு எந்த விதமான தடையும் இருக்காது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவ சேவைகளுக்காக பயணிக்கலாம். ஏடிஎம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைகள், தொடர்புடைய மருத்துவ நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.