மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் ITI தொழிற்படிப்பு – நேரடி மாணவர் சேர்க்கை!
மதுரை மாவட்டம் கோ.புதுார் அரசு ஐ.டி.ஐ கல்லூரியில் 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான காலியான இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது .
தொழிற்படிப்பு :
தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் உயர் கல்வித்துறையின் உத்தரவின் பேரில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அரசு அனுமதியுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு – போக்குவரத்து துறை!
மற்றவைகளை தொடர்ந்து அரசு ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8 மற்றும் 10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை உள்ள வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை கே.புதூர் அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. செப்டம்பர் 15 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 29 வது அறிவியல் மாநாடு – பள்ளி குழந்தைகளுக்கு அழைப்பு!
மெஷினிஸ்ட், ஐ.சி.டி.எஸ்.எம்., இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எம்.எம்.டி.எம்., போன்ற இரண்டாண்டு தொழிற்பிரிவுகள், வெல்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கோபா, டி.டி.பி.ஓ., உணவு தயாரிப்பு, இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன் போன்ற 1 ஆண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடங்கள், இரண்டு செட் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை பற்றிய விவரங்களுக்கு 0452 – 290 3020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.