ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் – பிப்.18 கடைசி நாள்!
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் 10ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதே போல 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக லித்தியம் கண்டுபிடிப்பு – மத்திய அரசு தகவல்!!
இது குறித்த விண்ணப்பப் படிவம், முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது அதில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.