ITBP இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ள Head Constable (Motor Mechanic) மற்றும் Constable (Motor Mechanic) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 186 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ITBP வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Head Constable (Motor Mechanic) – 58 பணியிடங்கள் மற்றும் Constable (Motor Mechanic) – 128 பணியிடங்கள் என மொத்தம் 186 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Head Constable (Motor Mechanic) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் மெக்கானிக்கில் சான்றிதழ், புகழ்பெற்ற பட்டறையில் வர்த்தகத்தில் மூன்று வருட நடைமுறை அனுபவம் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் மூன்று வருட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Constable (Motor Mechanic) பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அந்தந்த வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Documentation, Written Examination, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி || முழு விவாரங்களுடன்!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.