ITBP Constable வேலைவாய்ப்பு 2022 – 100+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69100/-
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Constable பணிக்கான காலிபனியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indo-Tibetan Border Police Force (ITBP) |
பணியின் பெயர் | Constable |
பணியிடங்கள் | 108 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ITBP காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable பணிக்கென மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒத்துக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Constable (Carpenter) – 56 பணியிடங்கள்
Constable (Mason) – 31 பணியிடங்கள்
Constable (Plumber) – 21 பணியிடங்கள்
எல்லைக் காவல் படை கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITBP வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
எல்லைக் காவல் படை ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITBP தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test, Physical Standard Test, Written Examination, Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பயட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
எல்லைக் காவல் படை விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மாற்று தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் 19.08.2022ம் தேதி முதல் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.