அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு என்று எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
வானிலை தகவல்
உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஓட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
07.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.04.2022, 09.04.2022: தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி விடுமுறை? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
10.04.2022: தென் தமிழகம், இருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.04.2022: தென் தமிழகம், இருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிஒிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்.
ONGC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-
மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை