தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே தொடர்ந்து லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதமான கோடை காலத்திலும் நல்ல மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மழை நன்கு பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய வங்கக் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் சூறாவளிக் காற்று 50 கி மீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 60 கிமீ வேகத்தில் வீசும். அதே போல தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
Exams Daily Mobile App Download
அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க ஏற்றுமதி வரி 20% உயர்வு? மத்திய அரசு முடிவு!
அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்