அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 13ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

09.09.2022 மற்றும்‌ 10.09.2022: வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களிலும்‌, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

11.09.2022 முதல்‌ 13.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தமிழக பள்ளி மாணவிகளுக்கான சூப்பர் திட்டம் – IG துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

09.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வடக்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள் மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

10.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!