தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் – வானிலை தகவல்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை பார்ப்போம்.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடைகாலத்தில் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலங்களாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பல்வேறு மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
எப்போதும் அக்னி நட்சத்திரம் என்றாலே மக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் இருப்பார்கள். ஆனால் இந்த வருடம் கொட்டி தீர்த்த கனமழையால் அக்னி நட்சத்திர வெயிலை மக்கள் நன்றாகவே சமாளித்தனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, அடையார், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, புறநகர் பகுதிகளான மதுரவாயல், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
Tech Mahindra வேலைவாய்ப்பு 2022 – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் , நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.