தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

காற்றின் திசை மாறுபட்டால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

மழை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கோடை காலம் என்பதால் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கோடை வெயிலால் மக்கள் வருடந்தோறும் சிரமப்படுவர். இத்தகைய நேரத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்யும். அதே போல நடப்பு ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர். அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.

Exams Daily Mobile App Download

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் மீண்டும் மழை பெய்தது. இன்றைய தகவலின் படி ஜூன் 29, 30ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை 30 ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!