TCS நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான IT வினாடி வினா போட்டி – முழு விவரம் இதோ!
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான TCS நாட்டின் மிகப்பெரிய பள்ளிகளுக்கு இடையே IT வினாடி வினா போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை, பரிசுகள் உள்ளிட்ட தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வினாடி வினா போட்டி
கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியிலும் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிகளுக்கு இடையே வினாடி வினா போட்டியை நடத்த TCS நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது கடந்த 1999 இல் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான இந்த போட்டிகள் தொடர்ந்து 23 வது ஆண்டாக நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்று நிமித்தமாக இவை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு உத்தரவு!
இந்த மெகா திட்டத்தின் தொடக்கத்தை அறிவித்த TCS நிறுவனம், ‘இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி இந்த ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் கடந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறைக்கு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட நிலையில், TCS ன் இந்த 23 ஆவது ஆண்டுக்கான போட்டிகளும் வழக்கம் போல உற்சாகமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளது. இந்த போட்டிக்கான பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அந்த வகையில் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகள் அதன் குழுவை பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். போட்டிகளின் முதல் கட்டமான மாக் ப்ரீலிம்ஸ் iON இயங்குதளம் மூலம் அக்டோபரில் நடத்தப்படும். தொடர்ந்து இறுதிப் போட்டிகள் நவம்பர் 2 ஆவது வாரத்தில் நடத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
பதிவு இணைப்பில் இந்த வினாடி வினா போட்டியின் வடிவம் மற்றும் விதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, தங்கப் பதக்கம், வெற்றியாளர் சான்றிதழ், பரிசு வவுச்சர்கள் கொடுக்கப்பட உள்ளது. கூடுதலாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் நுழையும் போட்டியாளர்களுக்கும் இதே போன்ற விருதுகள் மற்றும் கோப்பைகள் கொடுக்கப்பட உள்ளன.