சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த இனி இது கட்டாயம் – பயணிகள் கவனத்திற்கு!

0
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த இனி இது கட்டாயம் - பயணிகள் கவனத்திற்கு!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த இனி இது கட்டாயம் – பயணிகள் கவனத்திற்கு!

சென்னை மெட்ரோ சேவை மூலமாக ஏகப்பட்ட மக்கள் தினமும் பயணம் செய்து வரும் நிலையில், அனைத்து பயணிகளும் விரைவில் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை பெற வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.

மெட்ரோ பயண அட்டை

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 2015ம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை இயங்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் மக்கள் இதில் பயணம் செய்கின்றனர். பல முக்கிய வழித்தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், இன்னும் கூடுதல் வழித்தடங்களில் ரயில் சேவை இயங்க இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த மெட்ரோ பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு நிலம் கொடுப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உயரும் வழிகாட்டி மதிப்பு!

இந்த பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். மேலும் இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பண புழக்கத்தை குறைக்க வேண்டிய காரணத்தாலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பயண அட்டை மூலமாக பயணிகள் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, பணமில்லா பரிவர்த்தனைகள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் இந்த பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மூலமாக பயணிகள் பெற்று கொள்ளலாம். மேலும், வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறையானது அடுத்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும், அதனால் அனைத்து பயணிகளும் விரைவாக பயண அட்டையை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!