மீண்டும் பள்ளிகள் திறப்பு, மாணவர்களுக்கு ‘இது’ கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது 15 – 18 வயதுள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து 2021-22ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் காரணத்தால் தற்போது வரை பள்ளிகளை திறக்க முடியாத நிலை உருவானது. அதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தது. இந்த நிலையில் அரசின் தீவிர தடுப்பு பணிகளால் கொரோனா தாக்கம் சற்று குறைந்த போது பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு படிப்படியாக நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
இந்த நிலையில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளப்பியது. மருத்துவ வல்லுநர்களின் தகவலின் படி மூன்றாம் அலை கொரோனா பரவல் குழந்தைகளை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி தற்போது 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைவரும் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 15 – 18 வயதுக்குரிய மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பெற்றோரும் தங்களது 15 – 18 வயதுடைய குழந்தைகளுக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.