தமிழகத்தில் பேருந்துகளில் ‘இது’ கட்டாயம் – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருவதால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், சில கட்டுப்பாடுகளையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா நான்காம் அலை பரவல் பரவ துவங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை ( ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், கோவில்கள், அரசு விழாக்கள், திருவிழாக்கள், பூங்காக்கள், திரையரங்கங்கள், திருமண மண்டபங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது கட்டமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மாஸ்க்கை முறையாக அணிந்தாலே ஓரளவுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவ்வப்போது சுகாதாரத்துறை எச்சரித்த வண்ணமே இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தான் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை பேருந்து நடத்துனர் கவனிக்க வேண்டும் எனவும், பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.