இந்தியாவில் ஐடியை தொடர்ந்து வேலை இழப்பை சந்திக்க உள்ள மற்றொரு முக்கிய துறை – அச்சத்தில் ஊழியர்கள்!
நாட்டில் தற்போது சமீப காலமாக வேலை வாய்ப்புகள் பல துறைகளில் குறைந்து வருகிறது. இதில், முதல் வரிசையில் இருப்பது ஐடி துறை தான். தற்போது மற்றொரு துறையும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
வேலை இழப்பு அபாயம்:
இந்தியாவில் தற்போது பணவீக்க விகிதம் அதிகரித்து உள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களில் தேவையற்ற செலவுகள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், முதல் முயற்சியாக பணியாளர் குறைப்பு செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது இந்த செயல்பாட்டில் இறங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு துறையும் சேர உள்ளது.
தமிழக மக்களே கவனம்…. இந்த பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
அதாவது இந்தியாவில் இருந்து ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி சமீபமாக சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தொழிலாளர்களை அதிகம் கொண்ட ஜவுளித் துறையின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பருத்தி நூல் மற்றும் கைத்தறி பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு 1,310.49 மில்லியன் டாலர் ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் $767.50 மில்லியனாக டாலராக 40% சரிவை சந்தித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் குறைவான தேவை காரணமாக சூரத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஜவுளி மையங்கள் தங்களின் பணி நாளை குறைத்துள்ளது. டெக்ஸ்டைல் டிரேடர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இது பற்றி, கடந்த ஆண்டு தீபாவளி காலத்தில் மட்டும் சுமார் ₹16,000 கோடி ஆடை வணிகம் இருந்தது. இந்த முறை ₹8,000 கோடியை கூட தொடவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சூழலால் ஜவுளி துறை ஊழியர்களும் இனி வரும் நாட்களில் வேலை இழப்பை சந்திப்பரோ என்ற அச்சத்தை அனைவருக்கும் உண்டு செய்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்