Work From Home முறையை ஆதரிக்கும் IT நிறுவனங்கள் – முக்கிய தகவல்!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் Work From Home முறையையே பின்பற்ற IT நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. மேலும், ஊழியர்களுக்காக சில புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளனர்.
Work From Home:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 12,608 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஒரே நாளில் 72 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஊக்குவித்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், தற்போது மூத்த ஊழியர்கள் மட்டுமே தற்போது அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும், ஊழியர்களும் மீண்டும் அலுவலகங்களுக்கு செல்ல சலிப்பு காட்டி வருகின்றனர். இதனால், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக் போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலைத் தொடரும்படியான நீண்ட காலத் திட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும், டிசிஎஸ் நிறுவனம் ஹைபிரிட் வேலை மாதிரிக்கு 3Es- இயக்கவும், தழுவவும் மற்றும் அதிகாரமளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
Exams Daily Mobile App Download
அதே போல, டிசிஎஸ் நிறுவனம் ஹாட் டெஸ்க்குகளையும் அவ்வப்போது இயக்க மண்டலங்களையும் (OOZs) அமைத்துள்ளது. இந்த புதிய திட்டத்தினால் 25 சதவீதத்திற்கு மேல் ஊழியர்கள் அலுவலகங்களில் வேலை பார்க்க தேவையில்லை. அதே போல ஆன்லைன் பேமெண்ட்ஸ் தளமான Paytm நிறுவனமும் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கிறது. அதாவது, Paytm நிறுவனத்தின் தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிகப் பாத்திரங்களுக்காக வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிப்பதாக Paytm நிறுவனர் மற்றும் CEO விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்