பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் – அதிரடி திருப்பங்கள்!

0
பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் - அதிரடி திருப்பங்கள்!
பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் - அதிரடி திருப்பங்கள்!பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் - அதிரடி திருப்பங்கள்!
பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் – அதிரடி திருப்பங்கள்!

ராதிகாவிற்கும் கோபிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை தெரிந்ததுமே பாக்கியா வீட்டை விட்டே வெளியேறுகிறார். இந்நிலையில், பாக்கியாவை மீண்டும் வீட்டிற்கு வரும்படி சொல்லி ஈஸ்வரி கெஞ்சும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி இதற்கு பிறகாவது ராதிகாவை விட்டு விலகுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ராதிகாவுடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பமே பாக்கியா வீட்டில் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் வேளையில் கோபி மட்டும் ராதிகா எப்போது நன்றாக பேசுவார் எனவும், ராதிகா பழையதை மறந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். கோபி இதற்கு பிறகும் திருத்த வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்தில், பாக்கியா வீட்டில் இருந்த போது செழியன், இனியா என அனைவரும் பாக்கியாவை திட்டியபடியே தான் இருந்து வந்தனர். ஆனால், பாக்கியா தற்போது வீட்டில் இல்லை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் எப்படியும் பாக்கியா இரண்டு நாட்களுக்குள் வந்துவிடுவார் என்று தான் நினைத்தார்கள். ஆனால், பாக்கியா இதற்கு பிறகு அந்த வீட்டிற்கு செல்லவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். முதலில் இனியா வந்து பாக்கியாவிடம் கெஞ்சினார். அப்போது பாக்கியா இனிமேல் அந்த வீட்டிற்கு வரவே மாட்டேன் என கூறிவிட்டார்.

பாக்கியலட்சுமி’ கோபி வெளியிட்ட சோக வீடியோ – வருத்தத்தில் ரசிகர்கள்!

பின்பு, ஈஸ்வரி நான் சொன்னால் கண்டிப்பாக பாக்கியா வீட்டிற்கு வருவார் என பாக்கியாவை அழைக்க அந்த வீட்டிற்கு செல்கிறார். அப்போதும் பாக்கியா வீட்டிற்கு வர மறுக்கிறார். பின்பு, ஈஸ்வரி பாக்கியாவிடம் நீ இல்லாமல் வீடு வீடாகவே இல்லை. நீ கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும் என கெஞ்சுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாக்கியா இல்லாமல் இனியா தொடர்ந்து அழுதபடியே இருக்கிறார். கோபி வந்து சமாதானப்படுத்தியும் இனியா பாக்கியாவை நினைத்து ஏங்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!