ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கல் – மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் வீடுகள் இன்றி தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைகள்:
இந்தியாவில் ஏராளமானோர் தங்க வீடுகள் இன்றி தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் வசித்து வருகின்றனர். மாத வருமானம் இன்றி தவிக்கின்றனர். கிடைத்த வேலையை செய்து அதனால் வரும் பணத்தை வைத்து அன்றாட பொழுதை கழிக்கின்றனர். வெயில் மழை காலங்களில் தங்க வீடுகள் இல்லாமல் கிடைத்த இடங்களில் தங்குகின்றனர். சாலைகளில் குப்பைகளை சேமித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்டங்களும் இல்லை. எந்த அடையாள அட்டைகளும் இல்லை.
TN Job “FB Group” Join Now
சலுகைகைகளை பெறுவதற்கு குடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதன் மூலம் மக்கள் பயன் பெறுகின்றனர். இந்த கொரோனா பரவல் காலத்தில் அரசு ஏழை எளியோர்க்கு குடும்ப அட்டைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத்தொகை , மளிகை பொருட்கள் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. தெருக்களில் வசிப்போருக்கு குடும்ப அட்டைகள் இல்லாததால் இந்த நலத்திட்டங்களை அவர்களால் பெற முடியவில்லை.
Jio, Airtel பயனர்களுக்கு 3 மாத இலவச இன்டெர்நெட் சேவை? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!!
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும், தற்போதைய பெருந்தொற்று சூழலில் இந்த சட்டத்தால் பயனடைவதை உறுதி செய்வது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் தெருக்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அறிவுறுத்தியுள்ளது.