மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – உத்தரவு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்கள் கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியமானது விண்ணப்பித்து ஒரு மாதத்திற்குள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு பல மத்திய அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், கொரோனா பரவல் காரணமாக பல அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்கள் அவர்களது வருமானத்தை நம்பியே இருந்துள்ளது. அவர்களின் உயிரிழப்பு காரணமாக குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்த மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு ஓய்வூதிய தொகை மற்றும் சலுகைகளை விரைவாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறை உத்தரவு!
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பின்னர் உயிரிழந்த அரசு ஊழியர்கள் விவரம், மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாள், ஓய்வூதியம் வழங்க தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணம், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை அந்த துறை சார்ந்த அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.