கோபியை கண்டபடி அடித்த ஈஸ்வரி – அடுத்தகட்ட முடிவு என்ன? விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபி இத்தனை நாட்களாக மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்து ஏமாற்றியதால் கோபியை ஈஸ்வரி கண்டபடி அடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு ஈஸ்வரியின் முடிவு என்னவாக இருக்கும் என சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய உண்மைகள் ஈஸ்வரிக்கு தெரியவந்தும் கூட அதை நம்ப மறுத்து கொண்டிருக்கிறார். அதாவது கோபி ஒரு நாளும் அது போன்று வேறொரு பெண்ணை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார் என கூறுகிறார். பின்பு, பாக்கியா ஈஸ்வரியிடம் நானும் அப்படி தான் நினைத்து இத்தனை நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், அது எதுவுமே உண்மை கிடையாது. என்னுடன் பேச கூட நேரம் இல்லாமல் வெளியே போகும் போதெல்லாம் நம் வீட்டிற்காக தானே இவ்வளவு உழைக்கிறார் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டிருந்தேன்.
Exams Daily Mobile App Download
ஆனால், ராதிகாவை பார்க்க தான் இப்படி ஓடினார் என்பது தற்போது தானே தெரிய வருகிறது என பாக்கியா கூறுகிறார். அதற்கு பிறகும் கூட ஈஸ்வரி கோபியிடம் இவர்கள் உன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். நீ சொல் நீ அப்படி எதுவும் செய்யவில்லை தானே என கேட்கிறார். அப்போது கூட கோபி இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை என நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். பின்பு, பாக்கியாவிற்கு கோவம் வந்து குன்னக்குடியில் ராதிகாவுடன் தங்கியது முதல் அனைத்தையுமே ஈஸ்வரியிடம் பாக்கியா கூறுகிறார்.
பாரதியும், கண்ணம்மாவும் ஜானகி அம்மாவுக்கு செய்து கொடுக்கும் சத்தியம் – ப்ரோமோ ரிலீஸ்!
பின்பு, கோபியிடம் ஈஸ்வரி குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவருமே பெற்றோரை பார்த்து தான் வளர்கின்றனர். சிறு வயதில் இருந்தே நீ குடும்பத்திற்காக உழைப்பதை பார்த்து பெருமையாக கூறுவேன். குழந்தைகளையும் உன்னை பார்த்து வளரும்படி தான் சொல்லி சொல்லி வளர்த்தேன். ஆனால், நீயே இப்படி செய்வாய் என்று கனவிலும் நினைத்து கூட பார்க்கவில்லை என ஈஸ்வரி கோபியை கண்டபடி அடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.