வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமா? – தமிழக அரசின் புதிய ஐடியா!

0
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமா? - தமிழக அரசின் புதிய ஐடியா!
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமா? - தமிழக அரசின் புதிய ஐடியா!
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமா? – தமிழக அரசின் புதிய ஐடியா!

தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நூலக நண்பர்கள் திட்டம்:

சமீபத்திய மின்னணு சாதனங்களின் வருகையால் சில ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளது. மேலும் படிக்கும் ஆர்வத்தை இளைய தலைமுறையிடம் அதிகரிக்க அரசு ‘நூலக நண்பர்கள்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக திருச்சியில் உள்ள பொது நூலகத்தின் நூலகர் முகுந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொது நூலக இயக்குனரகம் மாநிலம் முழுவதும் உள்ள 2,500 நூலகங்களில் ‘நூலக நண்பர்கள்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2022-23 பட்ஜெட்டில் நூலகம் நண்பர்கள் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்தார். அதன்படி, மாநிலத்தில் உள்ள 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேர கிளை நூலகங்கள், 1463 இதர நூலகங்கள் மற்றும் 706 கிராம நூலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என பொது நூலக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு – இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த திட்டடத்தில், இனி வாசகர்களின் வீட்டு வாசலில் புத்தகங்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொது நூலக இயக்குனரகம் ஒவ்வொரு நூலகத்திற்கும் ஐந்து தன்னார்வலர்களை தேர்வு செய்யும். தன்னார்வலர்கள் வாசகர்களின் வீட்டிலேயே புத்தகங்களை வழங்குவதோடு, புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அடுத்த வாரம் மாவட்ட அளவில் நூலகர் கூட்டம் நடத்தப்பட்டு, தன்னார்வர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படாது, அதற்கு பதிலாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏராளமானோர் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!