பயணிகளின் கூட்டத்தை குறைக்க இப்படி ஒரு திட்டமா? – ரயில்வே கட்டணம் திடீர் உயர்வு!
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
கட்டண உயர்வு:
தமிழகம் முழுவதும் அதிக அளவிலான மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இதனால் பண்டிகை காலத்தில் அதிக மக்கள் கூட்டத்தை ரயில் நிலையங்களில் தவிர்க்க முடியாது. மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி திருட்டு மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களும் நடந்துவிடும். இதனை தவிர்க்க ரயில்வே வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், இந்த முறை சற்று புதிய யுக்தியை ரயில்வே வாரியம் கையாண்டுள்ளது. அதாவது ரயில்வே வாரியம் பயணிகளின் கூட்டத்தை பண்டிகை காலத்தில் குறைப்பது குறித்து தீவிர ஆலோசனையை நடத்தியது. அதன் முடிவாக, சென்னை ரயில்வே உட்பட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி போன்ற 8 ரயில் நிலையங்களில் பிளாட் பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
நாளைக்கு 6 மணி நேரம் கரண்ட் இருக்காது – தமிழகத்தில் அக்.01 பவர் கட் ஏரியா!
Exams Daily Mobile App Download
அதாவது இதற்கு முன்னதாக இந்த ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட் பார்ம் டிக்கெட்டின் விலை ரூ.10 ஆக இருந்தது. ஆனால், தற்போது அக்டோபர் 1-ம் தேதியான நாளை முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வரை 4 மாதங்களுக்கு இந்த ரயில் நிலையங்களில் பிளாட் பார்ம் கட்டண விலை ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட கட்டணத்தின் விளைவால் பயணிகள் கூட்டம் குறையும் என ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்