மத்திய அரசுத்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை? அக்னிபாத் திட்ட எதிரொலி!
இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் சரியாக வழங்கப்படவில்லை என்ற ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இடஒதுக்கீடு விவரங்கள்
நாடு முழுவதும் கொந்தளித்து கொண்டிருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் மத்திய அரசுத்துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. பொதுவாக, ஒவ்வொரு அரசு அல்லது ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் அரசுத்துறை ஊழியர்கள் பெருமளவு ஊதியத்துடன், பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவது வழக்கமானது. ஆனால், பொது மக்களுக்காவும், நாட்டின் அமைதிக்காகவும் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் சரிவர கவனிக்கப்படாதது தற்போது தெரிய வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தங்களது ஓய்வுக்கு பிறகு அரசு வழங்கிய இடஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசுத் துறையில் அளிக்கப்பட வேண்டிய வேலைகளில், பாதிக்கும் மேற்பட்ட துறைகளில் ராணுவ வீரர்கள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
அதாவது, பல்வேறு அரசுத்துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் சமீபத்தில் மத்திய சிவில் சேவைகள், வங்கிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய காவல் படைகளில் இருக்கும் இட ஒதுக்கீடு குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது பெறப்பட்டுள்ளது. இந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் 77 துறைகளில் சுமார் 48 துறைகள் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக இதில் வர்த்தகம், விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி, அணுசக்தி, சிவில் விமான போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், சாலை போக்குவரத்து, சட்டம் மற்றும் நீதி உள்ளிட்ட முக்கியமான சில துறைகள் இடம்பெறவில்லை. இதோடு 60% அரசுத் துறைகளில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்ட விகிதமும் பகிரப்படவில்லை. ஏனென்றால் அரசின் அறிவுறுத்தலின் படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசுத்துறையில் சரியான அளவு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்