நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லை ? அதிர்ச்சியில் மக்கள் !
இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க பணம் இல்லை என்று அரசு கூறுகிறது. இதனால் நாடு கடும் பஞ்சத்தை நோக்கி செல்கிறதோ என்று அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊதியம்:
கடந்த 2019ம் ஆண்டு சீனா நகரம் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. தீவுரமெடுத்து பரவிய கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளை பொருளாதார சரிவை சந்தித்தது. மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கை மீண்டு வர முடியாத அளவிற்கு பொருளாதாரத்தில் தற்போது பின் தங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கப் தேநீரின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எரிவாயு, எரிபொருள் வாங்க அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கையில் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. சுற்றுலா மூலம் அந்நாட்டிற்கு கிடைத்து வந்த அந்நிய செலாவணி நின்று விட்டது. அதனால் சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற 6 தமிழக கட்சி உறுப்பினர்கள் – வெளியான அறிவிப்பு!
இந்த நிலையை சமாளிக்க இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் உலக வங்கி கடன் உதவி அளித்து வருகிறது. தற்போது இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் உள்ளது என்று இலங்கை பொது நிர்வாகத்துறை செயலாளர் கூறுகிறார். மேலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும்,ஓய்வூதியம் வழங்க பணம் இல்லை என்கிறார். அதனால் இலங்கை கடும் பஞ்சத்தை நோக்கி செல்கிறதோ என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.