சமையல் சிலிண்டருக்கு இனி மானியம் கிடையாதா ? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு சார்பில் இருந்து வழங்கப்படும் மானியத்தொகை விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சிலிண்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மானியத்தொகை:
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. ஒரு மாதத்திற்கு 1 முதல் 2 சிலிண்டர்கள் வரை மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகளும், வியாபாரிகளுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில் சிலிண்டர் விலைக்காக பெரும் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டியதாக உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியத்தொகையை அரசு வழங்கவில்லை என்று புகார்கள் எழுந்தது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து மத்திய அரசு மானியத் தொகையை நிறுத்தி விட்டதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் மக்களின் நலனை கருத்தில் இந்த தொகையை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. நிறைய பேருக்கு சிலிண்டர் மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதே தெரியாமல் இருக்கின்றனர். இணையதளம் வாயிலாக மானியத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது சிலிண்டருக்கான மானியத்தொகையானது குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு வரை 100 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட மானியம் தற்போது 20 – 30 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தயாராவது எப்படி? முழு விவரம்!
இன்றைய நிலவரப்படி ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் அரசு அளிக்கப்படும் மானியம் போதுமானதாக இல்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசு தற்போது வழங்கப்படும் மானியமும் படிப்படியாக குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது போல, சிலிண்டருக்கான மானியமும் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்.