தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? அமைச்சர் விளக்கம்!
உலகளவில் கொரோனாவிற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் தாக்கம் ஒருவருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .
குரங்கு அம்மை:
கொரோனாவில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டும் வரும் நிலையில் தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 75 நாடுகளில் இதன் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு பரவத் தொடங்கி இருக்கிறது. கேரளா மற்றும் டெல்லியில் இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் அறிகுறியான கொப்புளங்கள், தேமல் உள்ளிட்டவை இருந்தால் அவர்கள் பரிசோதனை செய்து மாதிரி முடிவுகள் வரும் வரை தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
மேலும் கடந்த சில ஆண்டுகளில் குரங்கு அம்மை வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டு இருப்பதாகவும் இது குறித்து மரபியல் ஆய்வுகள் மூலம் நிருபணம் ஆகி இருக்கிறது. அதனால் பல வளர்ந்த நாடுகளும் இந்த நோய்யை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.