அரசு வங்கிகள் தனியார்மயமாவது சாத்தியமா? முழு விவரம் இதோ!
மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது அரசு வங்கிகள் தனியார்மயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி செயலாளர் டிவி சோமநாதன் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் வங்கிகளை தனியார் மையமாக்குவது சாத்தியமா என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
வங்கிகள் தனியார்மயமாதல்:
கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட இருப்பதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் அரசின் இந்த கொள்கையை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வாறு வேலை நிறுத்தம் செய்வதால் ஊதியம் இழப்பு ஏற்படும் என தெரிந்து கூட ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தது அவர்கள் எந்த அளவிற்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.
Exams Daily Mobile App Download
முதலில் வங்கிகள் தனியார்மயமாக்குவது சாத்தியமா என்பது பற்றி பார்க்கலாம். 1970,1980 ஆம் ஆண்டுகளில் தனியாக சட்டம் இயற்றப்பட்டு தனியார் வங்கிகள் அரசு வங்கிகளாக மாற்றப்பட்டன. ஆனால் தற்போது தனியார்மயமாக்க தேவையான சட்ட திருத்தம் தேவை, தற்போது அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் இது சாத்தியம் ஆகும். அரசு வங்கிகளை தனியாருக்கு விற்க வேண்டும் என்றால் தற்போதைய சந்தை மதிப்பிற்கோ அதற்கு கூடுதலாகவோ மட்டுமே விற்க முடியும்.
பொதுமக்களுக்கு மின்வெட்டு தொடர்பான பிரச்சனை – அரசு தரப்பு விளக்கம்!
தற்போது தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை ஏலம் எடுக்க தயாராக இருக்கின்றனர். மேலும் அவைகள் அரசு வங்கிகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்க தகுதி உடையதாக இருக்கின்றனர். ஆனால் அதற்கு இரண்டு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. முதலில் அதிக பணியாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை வாங்காது. இரண்டாவது தனியார் வங்கிகளிடம் எந்த வங்கியை வாங்குவதற்கு போதுமான உபரி நிதி இல்லை. அதனால் வங்கிகள் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடங்குவது வீண் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கைவிட்டு அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அரசு வங்கிகளின் செயல்திறனையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.