கோபி & ராதிகா திருமணத்தை தடுத்து நிறுத்தும் பாக்கியா? ‘பாக்கியலட்சுமி சீரியல்’ அதிரடி ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த கட்டமாக கோபி-ராதிகா திருமணம் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து கதையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அடுத்தடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட் அதிகம் வர இருக்கிறது.
பாக்யலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் கோபி-ராதிகாவோட கல்யாண வேலைகளை ராதிகாவின் அம்மாவும், அண்ணணும் மும்முரமாக செய்து வருகின்றனர். இதை பார்த்த ராதிகா எதுவுமே மறுப்பு சொல்லாமல் போகிறார். இதன் காரணமாக ராதிகா திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டார் என்று கோபி ஒரே சந்தோஷத்தில் இருக்கிறார். இதையடுத்து கோபி வீட்டை விட்டு போன பிறகு வீட்டு செலவுகளை சமாளிக்க பாக்கியா ரொம்பவே சிரமப்படுகிறார். இதனால் வீட்டில் இருக்கிற எல்லாரும் பாக்கியாவிடம் கோபமா நடந்து கொள்கிறார்கள்.
EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு – நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
இதனை தொடர்ந்து பாக்கியாவுக்கு புதிய சமையல் ஆர்டர் கிடைக்கிறது. ஒரு வழியாக குடும்ப செலவுகளை சமாளிக்க பணம் கிடைக்க போகிறது என்று பாக்கியா மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால் பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரி மட்டும் கோபத்துடனே நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கோபி வீட்டில் இருக்கும் அனைவரையும் அவர் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார். இதையடுத்து கோபியின் திருமணத்திற்கு அனைவரும் சம்மதம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதையில் அதிரடியான திருப்பங்கள் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, முதலில் கோபி- ராதிகா திருமணத்திற்கு ராதிகாவின் முதல் கணவர் பிரச்சனை செய்வார் என்று ப்ரோமோ வெளியாகி இருந்தன. இந்த நிலையில் கதையில் முக்கிய திருப்பமாக பாக்கியா கோபியின் திருமணத்தில் பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோபியின் திருமணம் நடைபெறுமா என்ற கேள்வியுடன் கதை தொடர இருக்கிறது. இந்த நிலையில் கோபி எடுக்க போகும் முடிவு என்ன? பாக்கியாவின் அடுத்த கட்ட முயற்சி என்ன? என்று பல கேள்விகளுக்கு வரவிருக்கும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்