ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்து கொள்ள போகிறாரா? உண்மையை தெரிந்து கொண்ட பாக்கியா!ப்ரோமோ ரிலீஸ்!
கோபியும் ராஜேஷும் ராதிகாவின் வீட்டிற்கு முன்பு சண்டை போட்டுக் கொண்டிருந்ததை செல்வி பார்த்து பாக்கியாவிடம் கூறிவிடுகிறார். இதன் பின்பு தற்போது கோபியை தான் ராதிகா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற அனைத்து விஷயத்தையும் பாக்கியா அறிந்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை மன்னித்து மீண்டும் ராதிகா ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததுமே கோபியை விட்டு விலகி விடலாம் என நினைக்கிறார். ஆனால், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
கோபியை வீட்டைவிட்டு ராதிகா வெளியே வலுக்கட்டாயமாக தள்ளும்போது ராஜேஷ் அதனை பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார். என்னை கழட்டி விட்டு கோபியுடன் நீ சுற்றிக் கொண்டிருந்தாய். தற்போது கோபியையும் கழட்டிவிட்டு வேறு யாருடன் தொடர்பு வைத்துக்கொள்ள போகிறாய் என ராதிகாவை ராஜேஷ் கண்டபடி திட்டி வைக்கிறார். இதனால் ராஜேஷுக்கும் கோபிக்கும் இடையே பயங்கர சண்டை வந்துவிடுகிறது. ராதிகாவிற்காக இருவரும் சண்டை போட்டுக் கொள்வதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. ஒரு பெண்ணிற்காக எப்படி சண்டை போடுகிறார்கள் பாருங்கள் என இருவரையும் கேலியாக ஊர் மக்கள் பேசுகின்றனர். சண்டை முடிந்ததும் கோபி அலுவலகத்திற்கு சென்று விடுகிறார். இதற்குப் பின்பு செல்வி சண்டை பற்றி கேள்விப்பட்டு பாக்கியாவிடம் கூறுகிறார்.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” பாலா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதாவது ராதிகாவிற்கு ஏதோ பிரச்சனை எனவும், ராதிகாவின் முதல் கணவர் ராஜேஷ் ராதிகாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் எனவும் செல்வி கூறுகிறார். உடனே, ராதிகாவை பார்க்க பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற விஷயத்தை ராதிகாவின் அம்மா தெரிந்த பிறகும் கூட எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறார். எப்படியாவது கோபியிடம் இருந்து பாக்கியாவை பிரித்து ராதிகாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். பின்பு, பாக்கியாவை பற்றி அவதூறாக இல்லாதது பொல்லாதது அனைத்தையும் ராதிகாவிடம் ராதிகாவின் அம்மா கூறுகிறார். இதற்கிடையே கோபியும் பாக்கியா என்னை விட்டு விலக நினைத்ததால் தான் அவர் எனக்கு விவாகரத்து கொடுத்திருக்கிறார். இல்லை என்றால் எதற்காக கொடுக்கப்போகிறார். நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என கோபி ராதிகாவை சமாதானப்படுத்தும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.