கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றதில் முறைகேடுகள்? – அமைச்சரின் அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் அதிக முறைகேடுகள் நடத்துள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்த பின்னர் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக அரசு கூட்டுறவு சங்க வங்கிகளில் உள்ள 5 பவுன் அளவிலான நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து தேர்தல் நடந்து அதில் திமுக தலைமையிலான அரசின் ஆட்சி அமைந்தது. இருப்பினும், நகைக்கடன் தள்ளுபடி திட்டம் அமல் செய்யப்பட வேண்டியது தமிழக அரசின் கடமையாகி விட்டது. முந்தைய அரசு அறிவித்துள்ள நகைக்கடன் தள்ளுபடி ஆணையினால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுளதாகவும், இதற்காக முதல் கட்டமாக ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளதாகவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நகைக்கடன் பெற்றவர்கள் குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்ட பின்னர் தான் திட்டத்தை அமல்படுத்த முடியும். மார்ச் 31, 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை ஈடாக வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. இந்நிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் பெற்றதில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, முறையாக அது குறித்து ஆய்வு செய்து நிச்சயமாக 5 பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் தகுதி உடைய நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். திமுக சார்பில் அறிவித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளது போல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.