IRCTC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Consultant (IT) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IRCTC |
பணியின் பெயர் | Consultant (IT) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
IRCTC நிறுவன காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Consultant (IT) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே IRCTC நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Consultant (IT) கல்வி தகுதி:
Consultant (IT) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Kotak Mahindra வங்கியில் வேலை – Degree :முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
Consultant (IT) முன்னனுபவம்:
இந்த IRCTC நிறுவன பணிக்கு ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் Train Editing, Firing, Testing, Train Profiling to Manage Traffic போன்ற பணி சார்ந்த துறைகளில் Level – 07, 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Consultant (IT) வயது வரம்பு:
01.01.2023 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு மிகாமல் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Consultant (IT) சம்பளம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு IRCTC நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் கொடுக்கப்படும்.
IRCTC தேர்வு செய்யும் விதம்:
Consultant (IT) பணிக்கு தகுதியான நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
IRCTC விண்ணப்பிக்கும் விதம்:
இந்த IRCTC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Resume) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.02.2023 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.