மத்திய அரசு நிறுவனத்தில் 32 காலிப்பணியிடங்கள் – ரூ.1,40,000/- ஊதியம்..!
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Assistant Manager மற்றும் Executive பணிக்கென்று 32 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Assistant Manager பணிக்கு 20 பணியிடங்கள் மற்றும் Executive பணிக்கு 12 பணிகள் என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் Civil Engineering துறையில் டிகிரியில் பட்டம் பெற்றவராக இருப்பது அவசியம்.
- Assistant Manager பணிக்கு நெடுஞ்சாலைகள் / ரயில்வே / பாலங்கள் ஆகியவற்றில் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Executive பணிக்கு மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- 01-12-2021 அன்றைய தினத்தின் படி, Assistant Manager பணிக்கு 30 வயது, Executive பணிக்கு 33 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடலாம்.
Join Our TNPSC Coaching Center
- Assistant Manager பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-வரையும், Executive பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரையும் தேர்வாகும் பணியாளருக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- SC / ST / EWS / PwD / Ex Service Man பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் UR / OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IRCON விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.