தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000 ஊதியத்தில் வேலை..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் வாகன சீராளர் எனும் Van Cleaner பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கடலூர் மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் எனும் Van Cleaner பணிக்கு என்று மொத்தமாக இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நன்கு உடல் தகுதி உள்ள நபராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு 01.07.2021 அன்றைய தினத்தின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- BC / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் என்றும், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என்றும் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
- Van Cleaner பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 1 என்கிற ஊதிய அளவின்படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPRO விண்ணப்பிக்கும் விதம்:
தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து 29.04.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.