Engineering முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் சமீபத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பை 12.04.2022 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Graduate Engineering Apprentice Trainees பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு பின் எளிமையாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.
IPRCL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Graduate Engineering Apprentice Trainees பணிக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E, B. Tech முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் Engineering Degree-யை 01.01.2020 அன்றைய நாளுக்குள் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Graduate Engineering Apprentice Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 23 வயது என IPRCL-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
IPRCL விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.05.2022 ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் இன்றே தங்களின் பதிவுகளை செய்து பயனடையலாம்.