அஞ்சல் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 650 காலிப்பணியிடங்கள்..!

0

அஞ்சல் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 650 காலிப்பணியிடங்கள்..!

இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் (India Post) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான மத்திய அரசின் இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் துறையில் Grameen Dak Sevak பணிக்கு என்று மொத்தமாக இந்திய முழுவதும் 650 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 45 பணியிடங்கள் நிரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பணிக்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்.
  • பணிக்கு 30.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

  • பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் Grameen Dak Sevak பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டு ரூ.30,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
  • பணிக்கு தேவையான திறமை வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் எழுத்து தேர்வானது நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. (உத்தேசமாக ஜூன் 2022 நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.)
  • பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.700/- வசூலிக்கப்பட்ட உள்ளது. இது குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!