Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – IPPB முக்கிய அறிவிப்பு!
போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் பேங்கில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு மற்றும் வங்கியில் பணம் செலுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று IPPB புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
IPPB புதிய அறிவிப்பு:
மக்கள் பொதுவாக தங்களது எதிர்கால தேவைக்காக பல்வேறு விதமாக சேமிப்புகளை தொடங்கி அதனை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலானோர் போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் பேங்கில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த பேங்கில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு வரம்புகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு பணம் தான் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான முழு பட்டியல் இதோ!
வங்கியால் அறிவிக்கப்பட்ட லிமிட்டெட் தொகைக்கு அதிகமான தொகை சேமிப்பவர்களுக்கு பான் கார்டு அவசியம் என்று வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ வங்கி கணக்கில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் பேங்கில் பேசிக் சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
சென்னையில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அவ்வாறு நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது சேமிப்பில் இருந்து எடுக்கப்படும் தொகையில் அபராத கட்டணமாக 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். மேலும் பேசிக் சேவிங்ஸ் கணக்கு தவிர மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு ரூ.1000 வரை டெபாசிட் செய்யலாம், ரூ.25,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் ரூ.0.50% அல்லது ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.