IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு - ரசிகர்கள் உற்சாகம்!
IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு - ரசிகர்கள் உற்சாகம்!
IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த 14 IPL சீசனில் சிறந்த அணிக்கான தேர்தல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடைபெற்றது. இதில் மில்லியன் கணக்கில் வாக்குகள் பதிந்தன. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் தேர்வு:

அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 14 IPL சீசனில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2013, 2015, 2017 ,2019 மற்றும் 2020 ஆகிய 5 ஆண்டுகளில் IPL பட்டங்களை வென்றது. சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டனாக வாய்ப்பளிக்கப்பட்டது. 2013 ஆண்டில் இருந்து ரோஹித் சர்மா மும்பை அணிக்கு சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து அணியை வழிநடத்தினார். இந்திய பிரீமியர் லீக்கில் அதிக ரசிகர்கள் கொண்ட 2 வது அணி என்ற பெயரை மும்பை அணி பெற்றுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் IPL தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – 51 வழக்குகள் பதிவு! 75 வாகனங்கள் பறிமுதல்!

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளது. பேஸ்புக்கில் 13 மில்லியன் , ட்விட்டரில் 7.2 மில்லியன் ,இன்ஸ்டாகிராமில் 8.4 மில்லியன் என மொத்தமா 28.6 பாலோவர்களை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் முதல் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடரும் ரசிகர்கள் அதிகமாகமானோர் சச்சினின் ரசிகர்களாக இருப்பார்கள். மேலும் மும்பை அணியில் சிறந்த வீரர்களான சச்சின்,ரிக்கி பாண்டிங் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடி உள்ளனர்.

IPL 2022:ராயல் சேலஞ்சர்ஸ் ஏலத்தில் குறிவைக்கும் 2 வீரர்கள் – ஆகாஷ் சோப்ரா பேட்டி!ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சமீபத்தில் கடந்த 14 IPL சீசனில் சிறந்த அணிக்கான வாக்குப்பதிவு சமூக வலைதளங்களில் நடைபெற்றது. இதில் மில்லியன் கணக்கில் வாக்குகள் பதிந்தன. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இதைதொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வது இடத்தையும் , ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 வது இடத்தையும் பிடித்தது. இந்த ஆண்டு IPL தொடரில் மும்பை அணி ரோஹித்,யாதவ்,பும்ராஹ்,போலார்டு ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும் மும்பை அணி மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!