IPL மெகா ஏலம்: ராஜஸ்தான் அணியின் வசம் ரூ.62 கோடி! குறிவைக்கும் வீரர்கள் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL மெகா ஏலம்: ராஜஸ்தான் அணியின் வசம் ரூ.62 கோடி! குறிவைக்கும் வீரர்கள் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL மெகா ஏலம்: ராஜஸ்தான் அணியின் வசம் ரூ.62 கோடி! குறிவைக்கும் வீரர்கள் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

IPL மெகா ஏலம்: ராஜஸ்தான் அணியின் வசம் ரூ.62 கோடி! குறிவைக்கும் வீரர்கள் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான IPL மெகா ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெகா ஏலத்தில் குறிவைக்கும் 10 வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

IPL மெகா ஏலம்:

இந்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளன. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தற்போது வெளிநாட்டு வீரர்கள் சிலர் IPL ஏலத்தில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. BCCI அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.

IPL 2022: மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை குறிவைக்கும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த ஆண்டு IPL மெகா ஏலத்துக்கு ராஜஸ்தான் அணிக்கு 62 கோடி மிஞ்சியுள்ளது. 15 வது சீசனில் இங்கிலாந்து வீரர்கள் சிலர் விலகியதால் இது ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிக்கலாக உள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் யாரையும் அவ்வணி தக்க வைக்கவில்லை. எனவே தொடக்க வீரர்களாக தன்மய் அகர்வால், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மணீஷ் பாண்டே ,ஷெல்டன் ஜாக்சன், ஷாருக் கான், ஆகியோரும் ஆல் ரவுண்டர்கள் ஷகிப் அல் ஹசன் ,மற்றும் பௌலர்களாக ஜேசன் ஹோல்டர்,ஜோஷ் ஹேசில்வுட்,முஸ்தாபிசுர் ரஹ்மான் , குல்தீப் யாதவ் என மொத்தம் 10 வீரர்களை மெகா ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!