IPL 2022 திருவிழா ஆரம்பம் – நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2022 திருவிழா ஆரம்பம் - நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022 திருவிழா ஆரம்பம் - நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022 திருவிழா ஆரம்பம் – நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

2022 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணையை BCCI பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிட்டது. அதில் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் இந்த ஆண்டுக்கான IPL ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மெகா ஏலத்திற்கான நேரலை ஸ்ட்ரீமிங் ஊடக உரிமையையும் BCCI அறிவித்தது.

IPL ஏலம் நேரடி ஒளிபரப்பு திருவிழா:

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. தற்போது துபாயில் நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுவதால் 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடரை துபாயில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆண்டு IPL தொடர் இந்தியாவிலையே நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL மெகா ஏலம் நாளை பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!

ஐபிஎல் 2022 ஏலத்திற்கான பர்ஸ் ரூ.80 கோடியில் இருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நாட்டு வட்டாரத்தைச் சேர்ந்த அதிக வீரர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு பிறகு இந்தியா திரும்பிய பங்கேற்பாளர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி டோஸ் 1 மட்டும் செலுத்தி டோஸ் 2 செலுத்தாமல் இருந்தால் அதன் முழு விவரங்களையும் பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம்!

2018-2022 சுழற்சியில் ஸ்டார் இந்தியா IPL போட்டிகள் மற்றும் ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை 16,347 கோடி ரூபாய்க்கு வாங்கியது. எனவே நாளை நடக்கும் மெகா ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பாகிறது. ஸ்டார் இந்தியாவிற்கு முன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் ஊடக உரிமையை 8,200 கோடி ரூபாய்க்கு வைத்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா ஊடக உரிமையை எடுத்துக் கொண்டபோது இது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தது. இதனை தொடர்ந்து பிசிசிஐ இப்போது 2023-27 சுழற்சியில் தொகை மூன்று மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. 40,000 முதல் 45,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!