IPL 2022: இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்ட அணிகள், மார்ச் 26 இல் போட்டிகள் துவக்கம் – BCCI மாஸ்டர் பிளான்!
IPL போட்டிகளின் ஆட்டம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது அனைத்து அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
IPL போட்டிகள்:
ஐபிஎல் 15வது தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச தரநிலை மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அணிகள் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், போட்டிகளுக்கான மற்ற பணிகள் நடந்து வருகின்றது.
அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன, குழுவுக்கு 5 அணிகள் ஒரு அணி மற்ற 4 அணிகளை எதிர்த்து இருமுறை ஆடும் போட்டிகள். மற்ற பிரிவில் உள்ள 4 அணிகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒரு போட்டியில் ஆட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் ஏ-யில், மும்பை இந்தியன்ஸ் அணி கேகேஆர், ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோஅணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகளை விளையாடும். அதே சமயத்தில் மும்பை அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், ‘பி’ பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக தலா 1 போட்டியிலும் விளையாடும்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!
பி- பிரிவில் ஆர்சிபி அணி தலா 2 ஆட்டங்களில் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத்துக்கு எதிராக விளையாடும். ஆர்சிபி அணி ஏ- பிரிவில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், பிறகு பிரிவு ஏ-இல் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும் விளையாடும்.
குரூப் ஏ:
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி)
குரூப் பி:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.