IPL 2022: இரவு 8 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டி – ரசிகர்கள் உற்சாகம்!
நடப்பு IPL சீஸனின் இறுதிப் போட்டிகள் மே 29ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஆட்டம் மட்டும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இறுதிப் போட்டி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 சீஸனின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்ற லீக் சுற்றுகள் எல்லாம் இரவு 7.30 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்துடன் லீக் சுற்றுகள் முடிவடைய இருப்பதால், அடுத்ததாக காலிறுதி, அரையிறுதி போட்டிகளை தொடர்ந்து இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அன்று அகமதாபாத் மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது, BCCI மற்றும் IPL அதிகாரிகள், பாலிவுட் பிரமுகர்கள் பங்கேற்கும் IPL 2022 சீசன் நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்குத் தொடங்கி 50 நிமிடங்கள் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு அதாவது 8 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் அதன் முதல் தசாப்தத்தில் ஐபிஎல்லின் வழக்கமான அம்சங்களாக இருந்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – RR அணிக்கு எதிரான போட்டிக்கணிப்பு!
ஆனால், சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி ஆஃப் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் (CoA) ஆட்சியின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அனுமதி நிறுத்தப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு கூட ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய மார்ச் 26ம் தெத்து அன்று தொடக்க விழா நடத்தப்படவில்லை. இப்போது, நிறைவு விழாவை நடத்துவது குறித்து பின்னர் நடந்த அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளின் இறுதி கட்டத்திற்கான நான்கு போட்டிகள் கொண்ட பிளே-ஆஃப்கள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகின்றன. அதன்படி, முன்னாள் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.