IPL 2022: மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிடல் எட்வர்ட்ஸ் பேட்டி!

0
IPL 2022: மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன் - பிடல் எட்வர்ட்ஸ் பேட்டி!
IPL 2022: மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன் - பிடல் எட்வர்ட்ஸ் பேட்டி!
IPL 2022: மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிடல் எட்வர்ட்ஸ் பேட்டி!

ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு பிடல் எட்வார்ட்ஸ் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிடல் எட்வர்ட்ஸ் பேட்டி:

இந்த ஆண்டு IPL தொடர் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை IPL தொடரை இந்தியாவிலையே நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. மும்பையின் மூன்று மைதானங்கள்- வான்கடே, பிரபோர்ன் மற்றும் மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியம் ஆகிய மூன்று மைதானத்திலும் மேலும் புனேவில் உள்ள 3 மைதானத்திலும் இந்த ஆண்டு IPL போட்டிகள் நடைபெறும் என்று BCCI கங்குலி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்று மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 74 குரூப் ஸ்டேஜ் லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் குவாலிபையர் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கு முன், வரும் 12,13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவித்தது. ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது. இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன.

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – மத்திய அரசு பெருமிதம்!

இந்நிலையில் ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். எட்வார்ட் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகள் 50 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடினார். இந்த முறை ஐபிஎல் ஏலத்துக்கு தனது பெயரை அடிப்படை விலையான 2 கோடிக்கு பதிவு செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!