IPL 2022 ஏலம்: 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலை கொண்ட 20 வீரர்கள் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
2022ஆம் ஆண்டு IPL ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது . இதில் INR 1.5 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்களின் முழு பட்டியலில் 20 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அடிப்படை விலையை குறைத்து பதிவு செய்த 20 வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
IPL ஆக்க்ஷன்:
பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,214 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது 590 வீரர்கள் கொண்ட இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎல்லில் பங்கேற்கவுள்ளன. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15 வது சீசன் ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. ஏலத்தில் எந்த அணி எந்த வீரரை எடுக்கப் போவது என ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் BCCI வெளியிட்ட 590 இறுதி வீரர்கள் கொண்ட பட்டியலில் 1.5 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்களின் முழு பட்டியலில் 20 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதில் ஷிம்ரோன் ஹெட்மியர் ,ஜேசன், வாஷிங்டன், சுந்தர், ஜானி பேர்ஸ்டோவ் , நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா , ஆரோன் பிஞ்ச், டவிட், மாலன், ஈயோன் மோர்கன், ஜேம்ஸ் நீஷம், இஷாந்த் சர்மா , அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் லின், க்ளென் பிலிப்ஸ்,ஆடம் மில்னே, உஸ்மான் கவாஜா , லூயிஸ் கிரிகோரி, ரிச்சர்ட்சன், டிம் சவுதி, கொலின்முன்றோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த 10 வீரர்களை 10 அணிகளும் முதல் தரப்பில் ஏலத்தில் எடுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.