IPL 2022: 10 அணிகள், 590 வீரர்கள் – சூடுபிடிக்கும் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2022: 10 அணிகள், 590 வீரர்கள் - சூடுபிடிக்கும் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: 10 அணிகள், 590 வீரர்கள் - சூடுபிடிக்கும் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: 10 அணிகள், 590 வீரர்கள் – சூடுபிடிக்கும் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் இறுதிப் பட்டியலை தற்போது BCCI வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் எந்த அணி எந்த வீரரை எடுக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் :

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது . இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 370 இந்திய வீரர்கள் பெங்களூருவில் அதிரடியாக ஏலம் போக உள்ளனர். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் – 17, ஆஸ்திரேலியா – 47, பங்களாதேஷ் – 5, இங்கிலாந்து – 24, அயர்லாந்து – 5, நியூசிலாந்து – 24, தென்னாப்பிரிக்கா – 33, இலங்கை – 23, வெஸ்ட் இண்டீஸ் – 34, ஜிம்பாப்வே – 1, நமீபியா – 3, நேபாளம் – 1, ஸ்காட்லாந்து – 2, அமெரிக்கா – 1 என மொத்தம் 220 வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். 2022 IPL ஏலம் வருகிற 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!

IPL மெகா ஏலத்தில் 10 அணிகளும் குறிப்பாக 10 வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிக போட்டிபோடும் என்று கூறப்படுகிறது. இதில் ஷிக்கர் தவான் , பேட் கம்மின்ஸ் , அஸ்வின் , வார்னர் , முகமது ஷமி , டு ப்ளசிஸ் ,ஷ்ரேயாஸ் ஐயர் , ராபாட , குயின்டன் டி காக் மற்றும் போல்ட் இடம்பெற்றுள்ளனர். இந்த 10 வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மெகா ஏலத்தில் கண்டிப்பாக தேர்வாக வேண்டும் என்று அனைத்து வீரர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!